சிம்ம குரல் மலேசியா வாசுதேவன்
இளையராஜாவின் பாடல்களை மேம்போக்காக கேட்கும் சில விவரமில்லா இளசுகள், இளையராஜா எஸ்பிபிக்கும், ஜேசுதாஸுக்குமே பன்முக பாடல்களை அதிகம் கொடுத்ததாக நினைத்து கொண்டிருக்கிறார்கள் ஆனால் இவ்விருவரை விடவும் மலேசியா வாசுதேவனுக்கு தான் அத்தனை அட்டகாசமான பன்முக பாடல்கள் கொடுத்திருக்கிறார் ராஜா.
காரணம் எஸ்பிபியின் குரல் எப்பவும் மென்மையாகவே இருக்கும், ஜேசுதாஸ் குரல் ஒருவித கானத்தனமையோடு இருக்கும், ஆனால் வாசுதேவன் குரல் மட்டுமே பாட்டுக்கு தக்கவாறு மென்மையாகவும், சிம்ம குரலாகவும் மாறும், அதுக்கு சிறந்த உதாரணம் "பொதுவாக எம்மனசு தங்கம்" பாடலும், "கட்டி வெச்சுக்கோ எந்தன் அன்பு மனசை..." பாடலும்.
ஒரு வேளை மலேசியா வாசுதேவன் திரையில் நடிக்காமல் இருந்து இருந்தால் "யார் அந்தக் காந்தர்வ வெண்கல குரலோன் !" என்று இன்றைய தலைமுறை அவரை வலைவீசித் தேடி இருக்குமோ என்னவோ.
எழுபதுகள், எண்பதுகள் என இரு தலைமுறை சாமானிய ஆண்களின் குரல் அவருடையது, சூப்பர் ஸ்டார் ரஜினியின் ஹிட் பாடல்களை வரிசைப்படுத்தினால் அதில் 50% வாசுதேவன் பாடல்களே இருக்கும், ரஜினியின் இத்தனை பெரும் வளர்ச்சிக்கு ஒருவகையில் அப்பாடல்களும் ஒரு காரணம் ஆனால் இளையராஜா போல இந்த திறமையாளனுக்கும் பெரிய அங்கீகாரம் ஏதுமில்லை என்பது யார் விட்ட சாபமோ...
இதோ என் இன்றைய வாசுதேவன் Playlist, எத்தனை பன்முக இசை பாருங்கள்.
இந்த மின்மினிக்குக் கண்ணில் ஒரு மின்னல் வந்தது,
பொதுவாக என் மனசு தங்கம்,
வான்மேகங்களே,
ஊரு விட்டு ஊரு வந்து,
வா வா வசந்தமே ! சுகந்தரும் சுகந்தமே,
ஆசை நூறு வகை,
ஒரு தங்க ரதத்தில் பொன்மஞ்சள் நிலவு,
அடி ஆடு பூங்கொடியே... விளையாடு பூங்கொடியே,
காதல் வைபோகமே காணும் நன்னாளிதே,
அள்ளித் தந்த பூமி அன்னையல்லவா,
அட உன்ன பார்த்த நேரம்,
பூங்காத்து திரும்புமா,
மாமாவுக்கு குடும்மா குடும்மா,
ஏய் வைச்சாலும் வைக்காம போனாலும் மல்லி வாசம்,
காதல் வந்துருச்சு ஆசையில் ஒடி வந்தேன்................
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக