சனி, 2 மே, 2020

மறந்து போன முகம்...நடிகர் ராஜீவ்


மறந்து போன முகம்... நடிகர் ராஜீவ்...

டி.ராஜேந்தரின் இசையில் அப்போது ஹிட்டானஒரு பாடல் 'அட யாரோ பின் பாட்டு பாட..'...இரயில் பயணங்களில் படத்தில் ஹிட்டானபாடல்...அந்தப்பாடலில் ஆடி ஹிட்டானவர் ராஜீவ்..

ராஜீவ் நிறைய படங்களில் வில்லனாக வந்தாலும் அவர் பாஸிட்டிவ் ரோல்களில் நிறைய படத்தில் வருவார்...கமலோடு நானும் ஒரு தொழிலாளி, பாடும் வானம்பாடி, காதல் கோட்டை போன்ற படங்களில் பாஸிட்டிவ் கேரக்டர். காதல் கோட்டையில் அவர் வில்லனைப்போலவே காட்டப்பட்டாலும் கடைசியில் ஒரே டயலாகால் உயர்ந்த இடத்துக்கு போய்விடுவார்.

மதுரையை சேர்ந்த ராஜசேகர் ஃபிலிம் இன்ஸ்ட்டிடியூட்டில் படித்தார். பெங்களூருவில் குடும்பத்தோடு செட்டிலான அவரது கிளாஸ்மேட் தான் பின்னாளில் ஆந்திராவில் ஹிட்டான ராஜேந்திர பிரசாத். கோர்ஸ் சேரவே தலையால் தண்ணீர் குடித்த பாடு. கோர்ஸ் இன்டர்வ்யூ செய்தது பாலச்சந்தர், ஸ்ரீதர், திருலோக்சந்தர்,,கே.எஸ்.கோபாலகிருஷ்ணன்..ஃபைலை தூதக்கி எறிந்து  கோபப்படுத்தி நடிக்க வைத்து பின் செலக்ட்டானார். கோர்ஸ் முடித்தும் ராஜீவுக்கு சினிமா வாய்ப்புக்கள் கிடைக்கவில்லை. நடிப்பை மூட்டை கட்டிவிடலாம் என முடிவெடுத்து தாஜ் கொரமண்டல் ஹோட்டலில் வெயிட்டர் வேலைக்கு சேர்ந்தார். மூன்று வருடம் அங்கு காலம் கழிந்தது. ஹோட்டலில் நடந்த ஆண்டுவிழாவில் ஆடி பரிசு வாங்க ஹோட்டல் ஆட்கள் சினிமாவுக்கு போனால் பிரகாசிக்கலாம் என தூபமிட மீண்டும் முயற்சி...

ஒரு முறை ஒரு டப்பிங் ஸ்டுடியோவில் ரவீந்தரை சந்தித்திருக்கிறார் ராஜீவ். மலையாளியான ரவீந்தர் ராஜீவிடம் தான் ஒரு தலைராகம் படத்தில் நடிப்பதாகவும் தனக்கு டப்பிங் குரல் தரமுடியுமா என கேட்க அவர் சம்மதித்திருக்கிறார். ரவீந்தர் டி.ராஜேந்தரிடம் அறிமுகம் செய்து வைக்க ராஜேந்தரோ 'பல்லு படாத பழத்தை குறிவைப்பது தான்டா இந்த அணிலோட பழக்கம்' என்கிற டயலாகை சொல்ல வைத்து  டெஸ்ட் எடுக்க ரவீந்தருக்கு அப்படத்தில் ராஜீவின் குரல். அடுத்து ராஜேந்தரே எடுத்த 'வசந்த அழைப்புகள்' படத்திலும் ரவீந்தருக்கு குரல் கொடுத்தார்.


ராஜேந்தர் தன் ரயில் பயணங்களில் படத்தில் இவரை வில்லனாக்க சினிமாஉலகில் கால் வைத்தார். அடுத்த படமே பாலைவனச்சோலை. அதிலும் வெயிட்டான ரோல் தான்..அடுத்து தேவரின் 'அஞ்சாத நெஞ்சங்களி'ல் நான்கு ஹீரோக்களில் ஒருவர். ராஜீவ் ஹீரோவாகவும் நடித்தார். மாடர்ன் தியேட்டர்ஸ் எடுத்த 'வெற்றி நமதே' படத்தில் ஹீரோ..நாடோடி ராஜா, வேடிக்கை மனிதர்கள், நிழல் தேடும் நெஞ்சங்கள் என எல்லாம் ஹீரோ தான்...பின் நாயக பதவியிலிருந்து கீழிறங்க...வில்லன்..

உள்ளே வெளியே படத்தில் வில்லனாக நடித்தார். ஜெயம் படத்தில் அப்பா ரோல்...பின் கிடைக்கும் வேஷங்களை செய்தார். அபூர்வராகங்கள் படத்தை கன்னடத்தில் சுஹாசினியை வைத்து பாலச்சந்தர் எடுத்த போது அதில் ஜெய்கணேஷ், ரஜினிகாந்த் நடித்த ரோலில் ராஜீவ் நடித்தார். அது ஹிட்டாக நிறைய கன்னடப்படங்களில் நடிக்க ஆரம்பித்தார்.

வயதாக ஆக வாய்ப்புகளும் குறைய தொடங்கின. நல்ல டப்பிங் கலைஞரானதால் நிறைற்ற டப்பிங் குரல் கொடுக்க தொடங்கினார். பாரதி படத்தில் பாரதிக்காக ஷாயாஜி ஷிண்டே குரல் ராஜீவுடையது தான். மோகன்லாலுக்காக அரண், சிறைச்சாலை, அரசன் போன்ற படங்களுக்கும், அருண்பாண்டியனுக்காக ராஜ முத்திரை, அசுரன் படங்களிலும் இவரது குரல் தான்.

எம்.ஜி.ஆர் சத்துணவு திட்டம் தொடங்கிய போது அதற்கு நிதி திரட்ட கங்கை அமரனோடு இசை நிகழ்ச்சிகள் நடத்தினார். அதை பாராட்டி எம்.ஜி.ஆர் அவருக்கு மோதிரம் பரிசளித்தார்.

ராஜீவின் பிறந்தநாளன்று நண்பர்களுக்கு இனிப்பு கொடுக்க போனபோது அவரது தந்தை மாரடைப்பால் இறந்தார். வந்து பார்த்த ராஜீவ் கதறினார். இடியாக அடுத்த ஒரு மாதத்தில் அவரது தாய்க்கும் மாரடைப்பு ஏற்பட ஒரு வருடம் ஆஸ்பத்திரியிலேயே இருந்து அவரும் இறந்தார். இந்த ஆறாத துக்கத்தால் ராஜீவ் திருமணமே செய்யாமல் காலத்தை கழித்தார்.அண்ணன்கள் ரொம்ப வற்புறுத்தியதால் உறவுக்கார பெண்ணை மணந்தார். ஒரு மகன், ஒரு மகள்...

எத்தனை படத்தில் நடித்தாலும் ராஜீவை மறக்கமுடியாதது அந்த ரயில் பயணங்கள் வில்லனான தீபக் கேரக்டர் தான்..வார்த்தையாலேயே அவர் ஜோதியை சுடுவது...அடடா..

"விலங்கை மட்டும் மாட்டிக்கல..இந்த விலங்கு கிட்ட மாட்டிக்கிட்டோம்னு ஃபீல் பண்றியா?"

"நீங்க ஏற்கனவே பார்த்துட்டீங்க...நான் இன்னும் பார்க்கவே இல்லை..ஐ மீன் படத்தை சொன்னேன்.."

"அது ஜேசுதாஸ் தாடி இல்லைடி. தேவதாஸ் தாடி.."

மனைவியின் முன்னாள் காதலனை அவள் முன்பாகவே ஆள் வைத்து அடித்து அதை ரசிக்கும் அந்த சாடிஸ்ட் கணவன்....ராஜீவ்...அசத்தல் வில்லன்...

நீங்க திரும்பவும் நடிக்கலாம்...சான்ஸ் கிடைத்தால்.....

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக