ஆண்டனி - படம் எப்படி இருக்கு? ஒன்இந்தியா விமர்சனம்
படம் துவங்கியதுமே ஹீரோ ஆண்டனி ஒரு காருக்குள் இருந்து மயக்கம் தெளிகிறார். தான் எங்கே இருக்கிறோம் என தெரியாமல் குழம்பும் ஹீரோவுக்கு, சிறிது நேரம் கழித்துதான் காருடன் மண்ணுக்குள் புதைந்து கிடப்பது புரிகிறது. பதற்றமடையும் ஹீரோ தன்னை யார் இங்கு அடைத்து வைத்திக்கிறார் என புரியாமல், வெளியேற முயல்கிறார். ஆனால் அவரால் முடியவ.
இதற்கிடையே, ஹீரோயின் மகா, காதலனை திருமணம் செய்து கொள்வதற்காக, சார் பதிவாளர் அலுவலகம் முன் காத்திருக்கிறார். வெகு நேரம் ஆகியும் ஆண்டனி வராததால், அவரது தந்தை ஜார்ஜிடம் தன் போகத்தை வெளிபடுத்திவிட்டு புறப்படுகிறார்.
இரவு முழுவதும் தன்னுடன் மது அருந்திய மகன், காலையில் திருமணத்துக்கு வராமல் எங்கே சென்றிருப்பான் என குழப்பும் ஜார்ஜ், மகனை தேடி கண்டுப்பிடிக்க புறப்படுகிறார். தந்தை ஜார்ஜ், மகனை கண்டுபிடித்தாரா?, மண்ணுக்குள் புதைந்துகிடக்கும் ஆண்டனி வெளியே வந்தாரா? என்ற கேள்விகளுக்கு விடையை தேடி பயணிக்கிறது மீதிக்கதை.
ஆண்டனி மூலம் ஹீரோவாக அறிமுகமாகி இருக்கும் நிஷாந்துக்கு முதல் படத்திலேயே கனமான பாத்திரம். மண்ணுக்குள் புதைந்து பெரும் சிரமப்பட்டிருக்கிறார். ஓரளவுக்கு திறம்படவே நடித்திருக்கிறார்.
ஹீரோயினாக அறிமுகமாகி இருக்கும் வைஷாலிக்கு, வழக்கமான தமிழ் சினிமா நாயகிக்கான டெம்பிளேட் கதாபாத்திரம். பெரிதாக வேலை ஒன்றும் இல்லை.
தமிழ் சினிமாவில் வில்லனாகவே பார்த்து பழக்கப்பட்ட லாலுக்கு, மகனை தேடும் தந்தை பாத்திரம். அவரளவுக்கு சரியாக செய்திருக்கிறார். ரேகாவிற்கு பெரிதாக எந்த வேலையும் இல்லை. சும்மா வந்து போகிறார். வில்லனாக அறிமுகமாகி இருக்கம் தயாரிப்பாளர் வெப்பம் ராஜா, சுமார் ரகத்தில் மிரட்ட முயல்கிறார்.
படம் ஆரம்பிக்கும் போது, மண்ணுக்குள் புதைந்துகிடக்கும் ஒரு மனிதனின் படப்படப்பும், மூச்சுத்தனறலும் நமக்கும் தொற்றிக்கொள்கிறது. ஆனால் போகப் போக சலிப்பை ஏற்படுத்தி போரடிக்க ஆரம்பித்து விடுகிறது. முதல் பாதிக்கு மேல் நகர முடியாமல் கதையும் மண்ணுக்குள் புதைந்துவிடுகிறது.
ஒளிப்பதிவாளர் பாலாஜியும், இசையமைப்பாளர் சிவாத்மிகாவும் தான் படத்தை ஓரளவுக்கு தாங்கி பிடித்திருக்கிறார்கள். பாலாஜியின் ஒளிப்பதிவு காதல், ஃபோபியா, ஆக்ஷ்ன் என அனைத்தையும் அழகாக பிரித்து காட்டுகிறது.
இந்தியாவின் முதல் கிளாஸ்ட்ரோஃபோபிக் சஸ்பென்ஸ் திரில்லர் படம் ஆண்டனி.அதைத்தவிர படத்தில் புதிதாக எதுவும் இல்லை.
ஹீரோயினாக அறிமுகமாகி இருக்கும் வைஷாலிக்கு, வழக்கமான தமிழ் சினிமா நாயகிக்கான டெம்பிளேட் கதாபாத்திரம். பெரிதாக வேலை ஒன்றும் இல்லை.
ஒளிப்பதிவாளர் பாலாஜியும், இசையமைப்பாளர் சிவாத்மிகாவும் தான் படத்தை ஓரளவுக்கு தாங்கி பிடித்திருக்கிறார்கள். பாலாஜியின் ஒளிப்பதிவு காதல், ஃபோபியா, ஆக்ஷ்ன் என அனைத்தையும் அழகாக பிரித்து காட்டுகிறது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக