இளைய தளபதி டூ தளபதி.... சினிமா டூ அரசியல் .. மெர்சல் அரசன் விஜய் பிறந்தநாள் பதிவு !
1992 ல் நாளைய தீர்ப்பில் அறிமுகமாகும் போது விஜய்க்கு வயது 20 , கடந்த வருடம் அவர் திரையுலகுக்கு வந்து 25 வருடங்கள் கடந்ததை ரசிகர்கள் கோலாகலமாக கொண்டாடினர்.
விஜய் அறிமுகமாகும் போது அவரது தோற்றத்தை கிண்டல் செய்து ஏராளமான விமர்சனங்களை சந்தித்தார். என்ன தான் பிரபல இயக்குநர் எஸ்.ஏ.சந்திரசேகரின் மகனாக பிறந்திருந்தாலும், அவர் அறிமுகமாகும் போது திரையுலகிலும் ரசிகர்களிடமும் போதுமான வரவேற்பு கிடைக்கவில்லை.
இந்நிலையில் எஸ்ஏசந்திரசேகர் புத்திசாலித்தனமாக ஒரு முடிவு செய்தார். தனது ஆஸ்தான நடிகர் விஜயகாந்தை அழைத்து தனது மகனுக்காக ஒரு படம் நடித்து தரும்படி கேட்டார். அந்த படம் தான் செந்தூரப்பாண்டி.
அதில் விஜய்காந்தின் மீது மக்களுக்கு இருந்து கிரேஸ் காரணமாக அந்த படம் விஜய் என்ற நடிகரை தமிழ்நாட்டின் மூலை முடுக்கெல்லாம் கொண்டு சேர்த்தது.
பின்னர் ரசிகன், தேவா, விஷ்ணு என மீண்டும் ஆவரேஜ் படங்கள் கொடுத்து வந்தவருக்கு இயக்குநர் விக்ரமன் மூலம் பெரிய பிரேக் கிடைத்தது. விக்ரமனின் பூவே உனக்காக படத்தில் விஜய் ஏற்றிருந்த காதலுக்காக உருகும் அந்த கதாபாத்திரம் மூலம் ரசிகர்கள் தங்களில் ஒருவராக விஜயை பார்க்கத் தொடங்கினர்.
குடும்ப பாசம், காதல், காமெடி என அனைத்து உணர்வுகளையும் அந்த படம் தந்ததால் குடும்பம் குடும்பமாக திரையரங்குகளுக்கு சென்று அந்த படத்தை கொண்டாடினர். பின்னர் சிறிது இடைவேளைக்கு பிறகு பாசிலின் காதலுக்கு மரியாதை அவரை புகழின் உச்சானிக்கு ஏற்றியது.
அது எந்த அளவுக்கு வெற்றி என்றால் அதுவரை உச்ச நட்சத்திரங்களை வைத்து மட்டுமே படம் இயக்கி வந்த கே.எஸ்.ரவிக்குமாரை அவர் பக்கம் திருப்பியது. அதுவரை காதலுக்கு முக்கியத்துவம் கொடுத்து வந்த படங்களை மட்டுமே செய்து வந்த விஜயை, திருமலை படம் ஒரு கம்ப்ளீட் ஆக்ஷன் ஹீரோவாக மாற்றியது.
அதன் பிறகு கில்லி, திருப்பாச்சி, சிவகாசி ஒவ்வொன்றும் ஆக்ஷன் சரவெடி. விஜய் மீது வைக்கப்படும் ஒரு மிகப்பெரிய விமர்சனம் அவர் அதிகமாக ரீமேக் படங்கள் செய்கிறார் என்பது.
ஆனால் அவரது பூவே உனக்காக, குஷி, துள்ளாத மனமும் துள்ளும், திருப்பாச்சி, துப்பாக்கி உள்ளிட்ட படங்கள் பல்வேறு மொழிகளில் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்றது அவரது மாபெரும் சாதனை.
பெரும்பாலான கதாநாயகர்களுக்கு பெரும்பாலும் இளைஞர்கள் மட்டுமே ரசிகர்களாக இருப்பார்கள். ஆனால் விஜயக்கு ஒரு குடும்பத்தில் சிறியவர் முதல் பெரியவர் வரை ரசிகர்களாக இருப்பர். அவர் படங்கள் வெளியாகும் திரையரங்குகளை பார்த்தாலே அது புரியும்.
அவரது கியூட்டான ரியாக்ஷன்கள், ஸ்டைல், காமெடி, நடனம் என ஒவ்வொரு வீட்டிலும் குட்டி குட்டி ரசிகர்களையும் தனது ரசிகர்களாக்கி வைத்திருக்கிறார். தமிழ்சினிமாவில் அன்று முதல் இன்று வரை நடனத்தில் அவர் தான் கிங். விஜய் பாடகராகவும் பல்வேறு ஹிட்களை கொடுத்து தமிழ்சினிமாவில் உலக நாயகன் கமல்ஹாசனுக்கு பிறகு தான் ஒரு சகலகலா வல்லவன் என்பதை நிரூபிக்கிறார்.
நடிகர்கள் ரஜினிகாந்த் மற்றும் விஜயகாந்த் இருவரும் அரசியலுக்கு வருவதாகக் கூறி அவர்களது ரசிகர்கள் மன்றத்தை பலப்படுத்தினர். அவற்றை வெறும் ரசிகர்கள் மன்றங்களாக வைத்திருக்காமல் மக்கள் மன்றங்களாக மாற்றி அதன் மூலம் பல்வேறு ரத்த தானம் போன்ற உதவிகளை செய்துவந்தனர்.
அதே பாணியை பின்பற்றிய விஜய் தனது ரசிகர் மன்றங்களை விஜய் மக்கள் இயக்கமாக மாற்றி, மக்களுக்கு பல்வேறு உதவிகளை செய்யத்தொடங்கினார். தொடக்கத்தில் மாதம் ஒருமுறை தனது ரசிகர்களை சந்திப்பது என்று இருந்த விஜய் தற்போது 3 மாதங்களுக்கு ஒரு முறை சந்தித்து வருகிறார்.
ஒவ்வொரு முறை ரசிகர்களை சந்திக்கும் போதும், பொறுமையாக அவர்கள் சொல்வதை கேட்டு, அவர்கள் தோளில் கைப்போட்டு புகைப்படங்கள் எடுத்து, அவர்களுக்கு மூன்று வேளைகளும் உணவு வழங்கி சிறப்பித்துவருகிறார். இதன் காரணமாக விஜயை அவரது ரசிகர்கள் அண்ணணாக , தனது குடும்பங்களில் ஒருவராக அவரை ரசிகர்கள் பார்க்கத் தொடங்கினர்.
மற்ற நடிகர்களை காட்டிலும், படங்களில் அவர் பேசும் அரசியல் வசனங்கள் அரசியல்வாதிகளை கதிகலங்க வைக்கும். அதற்கு கத்தி, மெர்சல் போன்ற படங்கள் ஆகச் சிறந்த உதாரணங்கள். பல்வேறு அரசியல் மேடைகளில் அவரது தந்தை எஸ்.ஏ.சந்திரசேகர் ஒவ்வொரு மக்கள் இயக்க மேடைகளிலும் விஜய் கட்டாயம் அரசியலுக்கு வருவார் எனக் கூறி அவரது ரசிகர்களை குஷி படுத்தி வந்தார்.
கடந்த 2011 ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் அதிமுகவுக்கு ஆதரவு அளித்து தனது அரசியல் பயணத்தை தொடங்கினார். ஆனால் அதற்கு பிறகு பொதுநிகழ்வுகளில் அரசியல் குறித்து பேசுவதை அவர் முற்றிலுமாய் தவிர்த்து வந்தார்.
இந்நிலையில் அவரது ரசிகர்கள் விஜயின் ஒவ்வொரு பிறந்தநாளின் போது அவரை அரசியலுக்கு அழைக்கும் விதமாக போஸ்டர் ஒட்டி மறைமுக அழைப்பு விடுக்கின்றனர்.
கடந்த வருடம் அனிதா இறப்பு, தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவம் போன்ற சமபவங்கள் மூலம் ஆர்ப்பாட்டங்கள் இல்லாமல், எளிமையாக யாருக்கும் தெரியாமல் மக்களை சந்தித்து ஆறுதல் கூறினார் விஜய்.
இதன் மூலம் ஒரு பொது பிரச்னையின் போது எப்படி நடந்துகொள்ள வேண்டும் என அரசியல் வாதிகளுக்கே முன்னுதாரணமாக திகழ்வதாக ரசிகர்கள் புகழாரம் சூட்டுகின்றனர்.
தொடக்கத்தில் தோற்றத்தை வைத்து விமர்சிக்கப்பட்ட விஜய் தான் தற்போது இந்திய அளவில் தமிழ்சினிமாவின் ஐகான். அவரது வெற்றி நமக்கு கூறுவது ஒன்றே ஒன்று தான். தன் மீது வைக்கப்படும் விமர்சனங்களை கடுமையான உழைப்பின் மூலம் பதில் கூறுங்கள் என்பதே!
பிறந்தநாள் வாழத்துகள் விஜய் !
1992 ல் நாளைய தீர்ப்பில் அறிமுகமாகும் போது விஜய்க்கு வயது 20 , கடந்த வருடம் அவர் திரையுலகுக்கு வந்து 25 வருடங்கள் கடந்ததை ரசிகர்கள் கோலாகலமாக கொண்டாடினர்.
விஜய் அறிமுகமாகும் போது அவரது தோற்றத்தை கிண்டல் செய்து ஏராளமான விமர்சனங்களை சந்தித்தார். என்ன தான் பிரபல இயக்குநர் எஸ்.ஏ.சந்திரசேகரின் மகனாக பிறந்திருந்தாலும், அவர் அறிமுகமாகும் போது திரையுலகிலும் ரசிகர்களிடமும் போதுமான வரவேற்பு கிடைக்கவில்லை.
இந்நிலையில் எஸ்ஏசந்திரசேகர் புத்திசாலித்தனமாக ஒரு முடிவு செய்தார். தனது ஆஸ்தான நடிகர் விஜயகாந்தை அழைத்து தனது மகனுக்காக ஒரு படம் நடித்து தரும்படி கேட்டார். அந்த படம் தான் செந்தூரப்பாண்டி.
அதில் விஜய்காந்தின் மீது மக்களுக்கு இருந்து கிரேஸ் காரணமாக அந்த படம் விஜய் என்ற நடிகரை தமிழ்நாட்டின் மூலை முடுக்கெல்லாம் கொண்டு சேர்த்தது.
பின்னர் ரசிகன், தேவா, விஷ்ணு என மீண்டும் ஆவரேஜ் படங்கள் கொடுத்து வந்தவருக்கு இயக்குநர் விக்ரமன் மூலம் பெரிய பிரேக் கிடைத்தது. விக்ரமனின் பூவே உனக்காக படத்தில் விஜய் ஏற்றிருந்த காதலுக்காக உருகும் அந்த கதாபாத்திரம் மூலம் ரசிகர்கள் தங்களில் ஒருவராக விஜயை பார்க்கத் தொடங்கினர்.
குடும்ப பாசம், காதல், காமெடி என அனைத்து உணர்வுகளையும் அந்த படம் தந்ததால் குடும்பம் குடும்பமாக திரையரங்குகளுக்கு சென்று அந்த படத்தை கொண்டாடினர். பின்னர் சிறிது இடைவேளைக்கு பிறகு பாசிலின் காதலுக்கு மரியாதை அவரை புகழின் உச்சானிக்கு ஏற்றியது.
அது எந்த அளவுக்கு வெற்றி என்றால் அதுவரை உச்ச நட்சத்திரங்களை வைத்து மட்டுமே படம் இயக்கி வந்த கே.எஸ்.ரவிக்குமாரை அவர் பக்கம் திருப்பியது. அதுவரை காதலுக்கு முக்கியத்துவம் கொடுத்து வந்த படங்களை மட்டுமே செய்து வந்த விஜயை, திருமலை படம் ஒரு கம்ப்ளீட் ஆக்ஷன் ஹீரோவாக மாற்றியது.
அதன் பிறகு கில்லி, திருப்பாச்சி, சிவகாசி ஒவ்வொன்றும் ஆக்ஷன் சரவெடி. விஜய் மீது வைக்கப்படும் ஒரு மிகப்பெரிய விமர்சனம் அவர் அதிகமாக ரீமேக் படங்கள் செய்கிறார் என்பது.
ஆனால் அவரது பூவே உனக்காக, குஷி, துள்ளாத மனமும் துள்ளும், திருப்பாச்சி, துப்பாக்கி உள்ளிட்ட படங்கள் பல்வேறு மொழிகளில் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்றது அவரது மாபெரும் சாதனை.
பெரும்பாலான கதாநாயகர்களுக்கு பெரும்பாலும் இளைஞர்கள் மட்டுமே ரசிகர்களாக இருப்பார்கள். ஆனால் விஜயக்கு ஒரு குடும்பத்தில் சிறியவர் முதல் பெரியவர் வரை ரசிகர்களாக இருப்பர். அவர் படங்கள் வெளியாகும் திரையரங்குகளை பார்த்தாலே அது புரியும்.
அவரது கியூட்டான ரியாக்ஷன்கள், ஸ்டைல், காமெடி, நடனம் என ஒவ்வொரு வீட்டிலும் குட்டி குட்டி ரசிகர்களையும் தனது ரசிகர்களாக்கி வைத்திருக்கிறார். தமிழ்சினிமாவில் அன்று முதல் இன்று வரை நடனத்தில் அவர் தான் கிங். விஜய் பாடகராகவும் பல்வேறு ஹிட்களை கொடுத்து தமிழ்சினிமாவில் உலக நாயகன் கமல்ஹாசனுக்கு பிறகு தான் ஒரு சகலகலா வல்லவன் என்பதை நிரூபிக்கிறார்.
நடிகர்கள் ரஜினிகாந்த் மற்றும் விஜயகாந்த் இருவரும் அரசியலுக்கு வருவதாகக் கூறி அவர்களது ரசிகர்கள் மன்றத்தை பலப்படுத்தினர். அவற்றை வெறும் ரசிகர்கள் மன்றங்களாக வைத்திருக்காமல் மக்கள் மன்றங்களாக மாற்றி அதன் மூலம் பல்வேறு ரத்த தானம் போன்ற உதவிகளை செய்துவந்தனர்.
அதே பாணியை பின்பற்றிய விஜய் தனது ரசிகர் மன்றங்களை விஜய் மக்கள் இயக்கமாக மாற்றி, மக்களுக்கு பல்வேறு உதவிகளை செய்யத்தொடங்கினார். தொடக்கத்தில் மாதம் ஒருமுறை தனது ரசிகர்களை சந்திப்பது என்று இருந்த விஜய் தற்போது 3 மாதங்களுக்கு ஒரு முறை சந்தித்து வருகிறார்.
ஒவ்வொரு முறை ரசிகர்களை சந்திக்கும் போதும், பொறுமையாக அவர்கள் சொல்வதை கேட்டு, அவர்கள் தோளில் கைப்போட்டு புகைப்படங்கள் எடுத்து, அவர்களுக்கு மூன்று வேளைகளும் உணவு வழங்கி சிறப்பித்துவருகிறார். இதன் காரணமாக விஜயை அவரது ரசிகர்கள் அண்ணணாக , தனது குடும்பங்களில் ஒருவராக அவரை ரசிகர்கள் பார்க்கத் தொடங்கினர்.
மற்ற நடிகர்களை காட்டிலும், படங்களில் அவர் பேசும் அரசியல் வசனங்கள் அரசியல்வாதிகளை கதிகலங்க வைக்கும். அதற்கு கத்தி, மெர்சல் போன்ற படங்கள் ஆகச் சிறந்த உதாரணங்கள். பல்வேறு அரசியல் மேடைகளில் அவரது தந்தை எஸ்.ஏ.சந்திரசேகர் ஒவ்வொரு மக்கள் இயக்க மேடைகளிலும் விஜய் கட்டாயம் அரசியலுக்கு வருவார் எனக் கூறி அவரது ரசிகர்களை குஷி படுத்தி வந்தார்.
கடந்த 2011 ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் அதிமுகவுக்கு ஆதரவு அளித்து தனது அரசியல் பயணத்தை தொடங்கினார். ஆனால் அதற்கு பிறகு பொதுநிகழ்வுகளில் அரசியல் குறித்து பேசுவதை அவர் முற்றிலுமாய் தவிர்த்து வந்தார்.
இந்நிலையில் அவரது ரசிகர்கள் விஜயின் ஒவ்வொரு பிறந்தநாளின் போது அவரை அரசியலுக்கு அழைக்கும் விதமாக போஸ்டர் ஒட்டி மறைமுக அழைப்பு விடுக்கின்றனர்.
கடந்த வருடம் அனிதா இறப்பு, தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவம் போன்ற சமபவங்கள் மூலம் ஆர்ப்பாட்டங்கள் இல்லாமல், எளிமையாக யாருக்கும் தெரியாமல் மக்களை சந்தித்து ஆறுதல் கூறினார் விஜய்.
இதன் மூலம் ஒரு பொது பிரச்னையின் போது எப்படி நடந்துகொள்ள வேண்டும் என அரசியல் வாதிகளுக்கே முன்னுதாரணமாக திகழ்வதாக ரசிகர்கள் புகழாரம் சூட்டுகின்றனர்.
தொடக்கத்தில் தோற்றத்தை வைத்து விமர்சிக்கப்பட்ட விஜய் தான் தற்போது இந்திய அளவில் தமிழ்சினிமாவின் ஐகான். அவரது வெற்றி நமக்கு கூறுவது ஒன்றே ஒன்று தான். தன் மீது வைக்கப்படும் விமர்சனங்களை கடுமையான உழைப்பின் மூலம் பதில் கூறுங்கள் என்பதே!
பிறந்தநாள் வாழத்துகள் விஜய் !
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக